வேலூர் : பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, நளினி பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இதற்கிடையில், நளினியின் தாய் பத்மா முருகனுக்கு பரோல் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் பரோல் வழங்கக்கோரி இன்று காலை சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறை நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கடிதம் கொடுத்தால், முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்படும். தற்போது அனுமதி கடிதம் கொடுக்காமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளது. சிறை விதிகளுக்கு புறம்பானது. ஆகையில் சிறை நிர்வாகத்தை பொறுத்தவரை முருகன் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை,” என்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.