தமிழகம்

அரிட்டாபட்டியில் கேட்ட குண்டு சத்தம்.. மூட்டை முடிச்சை கட்டிய அருள்நிதி & கோ!

மதுரை அரிட்டாபட்டி பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது வெடிகுண்டு சத்தம் கேட்டதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படக்குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் வனக் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று (டிச.5) சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரைப்பட படப்பிடிப்பிற்காக, பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். அப்போது, அதிக சத்தம் எழுப்பும் வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஜேசிபி, கிரேன், கம்ப்ரசர் கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடி வைத்து தகர்த்தாகவும் கூறப்படுகிறது.

இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, பல்லுயிர் தளமாக உள்ள அரிட்டாடிபட்டி பகுதியில் வெடிபொருட்கள் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தனர் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!

ஏற்கனவே, டங்ஸ்டன் எடுப்பது குறித்த விவகாரம் சென்று கொண்டிருப்பதால், படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்குழுவினருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பால் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி படக்குழுவினரை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றனர். இந்த படப்பிடிப்பு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படம் ஆகும்.

முன்னதாக, அரிட்டாபட்டியில் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகின. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

2 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

3 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

4 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

4 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

5 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

5 hours ago

This website uses cookies.