Categories: தமிழகம்

அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு

யார் தவறு செய்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தி உள்ளது தமிழக முதல்வருக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டுகிறது

எங்களுக்கு தகவல் கிடைக்கின்ற போது எந்த பதவியில் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று அந்த தவறை கையும் களவுமாக பிடிப்பதுதான் லஞ்ச ஒழிப்பு துறையின் கடமை

அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் எள்ளளவு கூட பயப்பட மாட்டோம் என்று தெளிவாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த அரசு பணியாது அஞ்சாது, அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது.

இருப்பினும் அப்பாவு துணிச்சலானவர். அவருக்கு வந்த மிரட்டலை அவர் வெளி கொண்டு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பான சட்ட மசோதாவில் ஆளுநர் கேட்கின்ற விளக்கங்களை அளித்து மீண்டும் அதனை ஆளுநருக்கு திருப்பி அனுப்புவோம்.

என் மீதும் அமைச்சர்கள் கே என் நேரு பெரியசாமி ஆகியோர் மீது அதிமுக அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நாங்கள் நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம் அதன்படி நீதி எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது
உச்ச நீதிமன்றத்திலும் சரி உயர்நீதிமன்றத்திலும் சரி இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது

தொடர்ந்து என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டு என்னுடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தமிழாக்கத்துறை மீது அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைப்பதால் அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பதா என்பதை முதல்வர் முடிவு செய்வார்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் தற்போது முன்னணி நிலவரங்கள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனைத்து முடிவுகளும் வந்த பிறகு தான் முழு வடிவம் பெறும் இருப்பினும் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் இதில் ஆறுதி பெரும்பான்மை வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

8 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

8 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

9 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

9 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

11 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

11 hours ago

This website uses cookies.