பிறந்தநாள் விழாவுக்கு சென்ற 3ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் : கோவையில் பயங்கரம்..!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர் கடந்த ஐந்தாண்டுகளாக கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவரது மனைவி செண்பகவல்லி (32) ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மழலையர் தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவர்களது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான் .இரண்டாவது மகள் ஜோதிப் பிரியா மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர்கள் வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அதற்கு ஜோதி பிரியாவை வந்து கலந்து கொள்ளுமாறு அழைத்து உள்ளனர். அதற்கு அவரது தாயார் செண்பகவல்லி பிறந்த நாள் விழாவிற்கு செல்ல வேண்டாம் என கூறி உள்ளார்.
இருந்த போதும் கேக் வெட்டிவிட்டு உடனே திரும்பி சென்று விடலாம் என கூறி குழந்தை ஜோதிப்பிரியாவை அழைத்து உள்ளனர். பின்னர் ஜோதிப்பிரியா பிறந்த நாள் விழாவிற்கு சென்று உள்ளார் .ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை .
இதைத்தொடர்ந்து ஜோதிப்பிரியாவின் தாயார் செண்பகவல்லி குழந்தையைத் தேடி சென்று உள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் பக்கத்து வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளனர் அப்போது அதில் குழந்தை ஜோதிப்பிரியா மிதந்து கொண்டு இருந்தார்.
உடனே குழந்தையை வீட்டுக்காரர் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்து மருத்துவர்கள் குழந்தை ஜோதி பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தாயார் செண்பகவல்லி பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூடிக் கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை எப்படி விழுந்து இறந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
This website uses cookies.