தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் என்கிற பிரதீப். இவருடைய மனைவி சோனியா (வயது 20). கடந்த 11 மாதத்திற்கு முன் இவர்கள் திருமணம் செய்தனர்.
தற்போது சோனியா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்ட சோனியா தனது அத்தை முத்தழகியிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பவானி – பொன்னம்மா இடையே உள்ள ரகசிய தொடர்பு வெளியே தெரிந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறப்பில் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டபோது, இந்த பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இறப்புக்கு காரணமான நபர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுப்பட்டவரை அழைத்து செல்லும் போது காவலர் ஒரு தவறி சாலையில் விழுந்தார்.
மருத்துவமனைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வராததால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறியலால் தருமபுரி அரூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.