Categories: தமிழகம்

மாமியாருக்கு தகாத தொடர்பு.. நேரில் பார்த்த 9 மாத கர்ப்பிணி மருமகள் மர்ம மரணம் : உறவினர்கள் மறியல்… நடந்தது என்ன?

தருமபுரி : அரூர் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் மர்ம மரணமடைந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் ஜெயக்குமார் என்கிற பிரதீப். இவருடைய மனைவி சோனியா (வயது 20). கடந்த 11 மாதத்திற்கு முன் இவர்கள் திருமணம் செய்தனர்.

தற்போது சோனியா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்ட சோனியா தனது அத்தை முத்தழகியிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பவானி – பொன்னம்மா இடையே உள்ள ரகசிய தொடர்பு வெளியே தெரிந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறப்பில் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டபோது, இந்த பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இறப்புக்கு காரணமான நபர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுப்பட்டவரை அழைத்து செல்லும் போது காவலர் ஒரு தவறி சாலையில் விழுந்தார்.

மருத்துவமனைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வராததால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறியலால் தருமபுரி அரூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

7 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

7 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

8 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

9 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

10 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

12 hours ago

This website uses cookies.