Categories: தமிழகம்

திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்.. விசாரணையில் ஷாக் : உறவினர்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 19)இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும் பண்ருட்டி அருகே உள்ள சீரங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் (வயது 24) என்பவருக்கும் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 24 தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சரஸ்வதி திருமணத்திற்காக மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமணம் முடிந்து சில நாட்களில் கல்லூரிக்கு சென்று படிப்பைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஆனால் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கும் போது சரஸ்வதி தனது துப்பட்டாவால் தூக்கிலிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: மருத்துவ பரிசோதனை காரணமாக ஜாமீனை நீட்டிக்க வேண்டும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு!

தகவல் அறிந்து சரஸ்வதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர். மேலும் தனது மகள் திருமணம் ஆகி மூன்று மாதத்தில் உயிரிழந்திருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றன, திருமணம் ஆகிய கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

2 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

3 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

4 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

4 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

4 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

6 hours ago

This website uses cookies.