ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் சரகத்திற்கு உட்பட்ட காராட்சிகொரை வனப்பகுதியில் யானை ஒன்று வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு செய்த போது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர் வந்த பின்னர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின்னரே யானையின் இறப்புக்கு உண்டான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் மர்மமான முறையில் யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.