Categories: தமிழகம்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மர்மமரணம் : திருமணமான வாலிபரிடம் விசாரணை…உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

கரூர் : குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உரிய நீதி கேட்டு தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கொம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் இவரின் இரண்டாவது மகள் சுவேதா (வயது 26). திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் பில்லாபளையம் பகுதியை சேர்ந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் உள்ளநிலையில், சுவேதாவை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக செல்வி யிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

உனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இது சரியில்லை என செல்வி கண்டித்துள்ளார். இனிமேல் மகளை பின் தொடர வேண்டாம் என சொல்லியதாகவும், அதற்கு மகளை தரவில்லை எனில் கொலை செய்து விடுவேன் என சண்முகம் பிரியன் சொல்லியதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் நேற்று (13ந்தேதி) செல்வி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது, அங்கு வந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் மற்றும் அவரின் தாயார் இருவரும் உனது மகள் எங்கள் உறவினர் ரமேஷ் என்பவரின் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

அதைக் கேட்டவுடன் செல்வி மற்றும் அவரின் தங்கை கணவர் இளையராஜாவுடன் நேரில் சென்று பார்த்த போது, அங்கு உயிரற்ற சடலமாக மகள் படுத்திருந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது செல்வி கேட்டபோது உனது மகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

அதனையடுத்து தகவலின்பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை திரும்ப பெற மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு மருத்துவமனை வாயில் முன்பு அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்தேகமாக கூறிய நபரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டிஎஸ்பி கூறியதை அடுத்து அனைவரும் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அரசு மருத்துவமனை பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

12 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

13 hours ago

This website uses cookies.