திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இன்னிலையில் கடந்த 31ம் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். இவரது வீடு மற்றும் தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.
வீடு திரும்பி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது விவசாய தோட்டத்தில் முகமூடி அணிந்து உடல் முழுதும் போர்வையால் போர்த்தியபடி மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிட்டது பதிவாகி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும்,கும்பலாக வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
This website uses cookies.