புதுச்சேரி : புதுச்சேரியில் கோவில் காவலாளியை நள்ளிரவில் மர்ம நபர்கள் கத்தி மற்றும் கற்களால் தாக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53). புதுச்சேரி நகர பகுதியான காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி இரவு இவர் உறங்கி கொண்டிருந்த போது மூன்று மர்ம நபர்கள் தன்னை கத்தி மற்றும் கற்களால் தாக்கி விட்டு சென்றதாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
இதில் முதலில் ஒருவர் கையில் கத்தி உடன் வந்து சுப்ரமணியை தாக்குவதும்,அதில் பயந்து அவர் ஒட முயலும்போது மற்றொருவர் கற்களை எடுத்து தாக்குவதும், அப்போது மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து இருவரையும் ஏற்றி செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து காவலாளி தாக்கபட்ட சிசிடிவி காட்சிகளை போலிசார் வெளியீட்டு மூன்று மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் தாக்கபட்ட கோவில் காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கியவர்கள் ஏதேனும் முன்பகை காரணமாகவா அல்லது குடிபோதையில் தாக்கினார்களா என்பது குறித்து அவர்களை பிடித்த பிறகே தெரியவரும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.