தமிழகம்

நள்ளிரவில் கதவை தட்டிய மர்மநபர்கள்… பயந்து நடுங்கிய பாஜக பிரமுகர் : அதிகாலையில் டுவிஸ்ட்!

ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கதவை தட்டி 10 நிமிடங்கள் அங்கேயே சுற்றி வீட்டில் இருந்தவர்களை அச்சமடைய செய்துள்ளனர்.

ஓசூர் தேர் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (53) இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவராக பதவியில் இருந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இவரது மனைவி பார்வதி ஓசூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகராஜ் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 2.40 மணியளவில் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் தரைத்தளத்தில் இருந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் இருவரும் அதிவேகமாக தட்டி உள்ளனர். வீட்டின் கதவை பலத்த சத்தத்துடன் மர்ம நபர்கள் தட்டுவதை அறிந்த நாகராஜின் மனைவி பார்வதி மற்றும் அவரது வீட்டில் இருந்த மருமகள்கள், பேரக்குழந்தைகள் மாமியார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் முன்பக்க கதவில் அமைக்கப்பட்டிருந்த லென்ஸ் வழியாக வெளியில் நின்ற மர்ம நபர்களை பார்த்த அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அப்போது அந்த நபர்கள் இருவரும் முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள வீட்டின் கதவை பலமாக தட்டியுள்ளனர். அந்த வீட்டில் நாகராஜ் படுத்து உறங்கி உள்ளார் அவரும் இந்த சத்தத்தால் எழுந்துள்ளார்.

கீழ் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அவரை கதவை திறக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் யாரும் வீட்டின் கதவை திறக்கவில்லை என தெரிகிறது. வீட்டின் தரைதளம் மற்றும் மேல்புறத்தில் 10 நிமிடங்கள் வரை சுற்றித்திரிந்த அந்த மர்ம நபர்கள் இருவரும் பின்னர் அங்கிருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நாகராஜின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்த போது அதில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைவதும் வீட்டின் கதவை தட்டுவதும் கீழ்தளத்திற்கும் மேல் தளத்திற்கும் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகராஜ் தலைமையில் ஓசூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுக்க நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்குள் சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்கி மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

12 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

13 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

14 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

14 hours ago

This website uses cookies.