Categories: தமிழகம்

நள்ளிரவில் நடந்து சென்ற திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்த மர்மநபர்கள் : ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்திக்குத்து!!

கோவை : நள்ளிரவில் தனியாக சென்று கொண்டிருந்த திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்திய டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் பள்ளாளையம் பகுதியில் வசித்துவருபவர் தர்ஷா. இவர் சோனா என்ற திருநங்கையின் பாதுகாப்பில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
தர்ஷா வழக்கமாக திருநங்கைகளுடன் சேர்ந்து போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் செய்துவருவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து யாசகம் செய்தவர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சூலூர், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது கோவை ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே வந்துகொண்டு இருந்த திருநங்கை தர்ஷாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் தர்ஷாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர்.

இதற்க்கு மறுப்பு தெரிவித்த தர்ஷாவை மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த தர்ஷா கத்தி கூச்சலிட்டிருக்கின்றார்.

இதனால் பொதுமக்களிடம் சிக்கிவிடுவோமோ என மர்ம நபர்கள் நினைத்து திருநங்கை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றிருக்கின்றனர்.

இதில் திருநங்கை தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் ஆழமாக கத்திகுத்து ஏற்பட்டதில் தர்ஷா வலிதாங்காமல் அலறியுள்ளார். கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர்.

அந்த வழியாக ரோந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் தர்ஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள் தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருநங்கைகள் தர்ஷாவை தொடர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்தியது கோவை நீலிக்கோனாம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேகனாதன் மற்றும் பூபாலன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களை பிடிக்க போலிசார் இரண்டு தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மேகநாதன் மற்றும் பூபாலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் உள்ள திருநங்கைகளுக்கு உரிய வேலை வாய்ப்பும், பாதுகாப்பு தர தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு திருநங்கைகள் வலியுறுத்தினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!

"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…

9 hours ago

ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…

10 hours ago

ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…

11 hours ago

6 மாசத்துக்கு எதுவும் கேட்காதீங்க.. திடீரென மாறிய தமிழிசை முகம்!

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…

11 hours ago

போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…

12 hours ago

செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

12 hours ago

This website uses cookies.