Categories: தமிழகம்

மாயமான மாணவி… மரத்தடியில் தாலி கட்டி குடும்பம் : வாலிபர் செய்த செயல்.. திடுக்கிட வைத்த திருச்சி சம்பவம்…!!

மாயமான மாணவி… மரத்தடியில் தாலி கட்டி குடும்பம் : வாலிபர் செய்த செயல்.. திடுக்கிட வைத்த திருச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் ஸ்ரீநிதி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 6 ம் தேதி இரவு வீட்டில் இருந்த ஸ்ரீநிதி திடீரென மாயமான நிலையில் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தாய் சித்ரா புத்தாநத்தம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மாணவியும் வாலிபர் ஒருவரும் கருத்தகோடங்கிப்பட்டியில் உள்ள குமரிகட்டி மலைச்சரிவில் குண்டாங்கல் குன்றில் உள்ள உசிலை மரத்தில் சேலையில் தூக்கிட்டு இருவரும் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் பார்த்து இதுபற்றி புத்தாநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதை அடுத்து மக்கள் வந்து பார்த்த போது தான் தூக்கில் பிணமாக தொங்கியது ஸ்ரீநிதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நைனான் என்ற அஜித் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து புத்தாநத்தம் போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ஸ்ரீநிதி மற்றும் நைனான் என்ற அஜித் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் மாணவி காணமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்திருப்பதை அறிந்து இருவரும் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த இடத்தின் அருகே விஷ விதையும் இருந்ததால் அதையும் உட்கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் இறந்த நைனான் என்ற அஜித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் ஸ்ரீநிதியை திருமணம் செய்து கொண்டது போல் ஒரு புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

அதில் மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் இறப்பதற்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

1 hour ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

2 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

3 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

4 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

4 hours ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

5 hours ago

This website uses cookies.