சிறுமி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… பிறந்தநாள் விழாவில் நடந்தது என்ன? பெற்றோர்கள் சந்தேகம்!
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி. இவர் மழலையர் பள்ளியில் ஆசிரியை. இவர் கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். 9 வயதான மகள் கோகுல பிரியா பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். அங்கே சிறுமி கோகுல பிரியா சென்று உள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் மற்ற சிறார்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.கோகுல பிரியாவை காணவில்லை. பெற்றோர் அங்கே சென்று தேடிய போது நீர் தொட்டியில் சிறுமி மயங்கி நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி இறந்து கிடந்த நீர் தொட்டி திறந்த நிலையில் கிடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமி வீட்டிற்கு வராத நிலையில் அவரின் செருப்புகளை வீட்டின் முன் போட்டு சென்றனர். சிறுமியை காணவில்லை என நாங்கள் தேடிய போது நீர் தொட்டியை பார்க்க அங்கே இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.
சிறிய துவாரம் கொண்ட தொட்டியில் சிறுமி விழ வாய்ப்பில்லை. அங்கே என்ன நடந்தது, எப்படி அவர் இறந்தார்? என விசாரிக்க வேண்டும். இந்த இறப்பில் மர்மம் இருக்கிறது.
இதை போலீசார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவிற்கு நடந்த விவரங்களை மூடி மறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.