தமிழகம்

பெரியாரின் ஈரோட்டில் எடுபடுமா நாதக? திமுகவே ஒப்புக்கொண்ட இருமுனைப் போட்டி.. சூடுபிடித்த தேர்தல் களம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக – நாதக இருமுனைப் போட்டி உருவாகி உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

ஈரோடு: “சீமானின் பெரியார் குறித்த விமர்​சனம், வலதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள், இந்து அமைப்பு​கள் ஆகியவற்றிடம் வரவேற்பு பெற்றுள்ள​தால், அவர்களது வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற வாய்ப்புள்ளது. ஒருவகை​யில், சீமான் வீசும் இந்த பெரியார் அஸ்திரம், பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியைத் தகர்க்​கவும் வாய்ப்புள்ளது“ என பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்த அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

பரபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5ஆம் தேதி இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக, தேமுதிக, விஜயின் தவெக ஆகியவை தேர்தலில் போட்டி இல்லை என விலகி விட்டன.

இதனால், காங்கிரஸிடம் இருந்து திமுக வசம் ஈரோடு கிழக்கு தொகுதி வந்துவிடும் என்ற எண்ணத்தில், கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை என ஆணவத்தில் பேசமாட்டோம்’ என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், ‘இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், எங்களுக்கு அக்கட்சி போட்டி’ எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், கடந்த முறை நடந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்று, அப்போது பதிவான வாக்குகளில் 6.37 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மேலும் தற்போது மாநிலக் கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக சீமானின் பேச்சுகள், குறிப்பாக பெரியார் எதிர்ப்பு பேச்சு, பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பெற்ற மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற பெற்றோர்.. அடுத்தடுத்து கைதாகும் புள்ளிகள்!

இருப்பினும், தற்போது களம் காணும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டதன் மூலம், தொகுதிக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். அதேநேரம், திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமாரும் மக்களிடையே நன்கு அறிமுகமானவர் என்பதையும் நாதக நினைவில் வைத்துள்ளது என்றே தெரிகிறது

ஏனென்றால், 30 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்களைக் கொண்ட செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமாருக்கு எதிராக, கொங்கு வேளாளர் சமுதா​யத்தைச் சேர்ந்த சீதாலட்​சுமியை தேர்வு செய்திருக்​கிறார் சீமான். எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதியில், அதிமுக, பாஜக, தவெக நம்பிக்கை வாக்குகளை சீமான் கவர்ந்திழுத்தால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

24 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.