நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார் ஆகியோர் வந்தனர்.
இவர்கள் இருவரும் தவெகவில் இணைந்த பிறகு, அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்படும் பேச்சாளர் ராஜ்மோகனும் பனையூர் அலுவலகம் வந்துள்ளதாகல், அவரும் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை காளியம்மாள் மறுத்துள்ளார் என தனியார் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இருப்பினும், காளியம்மாள் சமீப காலமாக நாதகவில் அதிருப்தியில் உள்ளதால், மிக விரைவில் அவரும் இணைவார் எனக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில், அதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் முன்னாள் நிர்வாகிகளைத் தூக்கிய தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சற்று நிதானம் காட்டுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், சீமானின் பெரியார் எதிர்ப்பு பேச்சு, பிரபாகரன் உடனான சீமானின் சந்திப்பு கேள்விக்குறியானது ஆகியவை நாதகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் : ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
ஏற்கனவே, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி வந்த நிலையில், தற்போது மாநிலப் பொறுப்பாளர் ஜெகதீசன் பாண்டியன் விலகியுள்ளார். இதுபோன்று முக்கிய நிர்வாகிகள் விலகினால், நாதக ஆட்டம் காணும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரம், நாதக நிர்வாகிகள் அவர்களாகவே வெளியேறுவது புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாக்கு வங்கியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.