வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு : நீண்ட நேரம் காக்க வைப்பதாக புகார்!!
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சத்யா தேவி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வழியில் திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு சிறிது நேரம் காவல்துறை உதவியுடன் அங்குள்ள நாற்காலியில் அமர வைத்து நீர் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு அக்கட்சி தொண்டர்கள் வாகனம் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
நீண்ட நேரம் நிற்க முடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அறை அருகே காத்திருந்து வருகிறார். காலையில் 11:20 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதில் சில குழப்பம் நீடித்து வருகிறது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.