மீண்டும் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதால் பரபரப்பு….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அப்போது சாட்டை துரைமுருகனிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பல்வேறு உள்விவகாரங்களை சீமான் உள்ளிட்டோர் செல்போனில் பேசிய பேச்சுகளின் ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியானது.

திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஜாதிய நோக்கத்துடன் செயல்படுவதாக சீமான் பொது இடங்களில் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு எஸ்பி வருண்குமார் பதில் கொடுத்ததுடன் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசும் அனுப்பினார்.

இந்த நிலையில் எஸ்பி வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் என்பவரை திருச்சி தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருப்பதி மற்றும் கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Sudha

Recent Posts

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

19 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

38 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

48 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.