தலைமுடியை காரணம் காட்டி நாகையில் பழங்குடியின மாணவனுக்கு 2 நாட்கள் இறுதிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள மேல வாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த சத்யா – முருகேசன் தம்பதியினரின் மகன் அருண்குமார். தந்தை முருகேசன் உயிரிழந்த நிலையில், துப்புரவு பணியாளராக நாகை நகராட்சியில் பணிபுரியும் சத்யாவின் உழைப்பில் அருண்குமார் நாகை ADJ தர்மாம்பால் அரசு உதவிபெறும் கல்லூரியில் EEE இறுதியாண்டு படித்து வருகிறார்.
கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் முடி வெட்டவில்லை என்பதை காரணம் காட்டி அருண்குமாருக்கு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடும் சிரமத்திற்கு மத்தியில் தேர்வு கட்டணம் செலுத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாக மாணவனுக்கு தேர்வு எழுத கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனுமதி மறுத்ததால் மாணவன் மற்றும் பெற்றோர் கல்லூரி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவெட்டாத 3 மாணவர்களில் இருவருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், முடி வெட்டிய பிறகும் சாதியை காரணம்காட்டி தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடும் சிரமத்திற்கு மத்தியில் கல்லூரி கட்டணம் செலுத்தியதாக கண்ணீருடன் கூறிய மாணவனின் தாய் சத்யா, தன் மகனின் படிப்பு வீணாகி விட்டதாகவும், முதல்வரின் சாதிய பாகுபாட்டால் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் கல்லூரி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், யாரும் மாணவனின் தரப்பை கண்டுக்காமல் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறியுள்ள உறவினர்கள், அவர், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.