நாகையில் சாலையின் ஓரமாக சென்ற நபரை, காளைமாடு ஒன்று கொம்பால் முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாகப்பட்டினம் மேலக்கோட்டைவாசலை சேர்ந்தவர் சபரிராஜன் (55). இவர் வழக்கம்போல் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, மேலகோட்டை வாசல் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது, திடீரென அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று, சபரி ராஜனை குத்தி தூக்கி வீசியது.
அப்போது, திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சபரி ராஜன் விழுந்துள்ளார். இதில் பேருந்து பின் சக்கரம் சபரிராஜனின் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் சென்றவர்கள் பேருந்து திடீரென குலுங்கியதை அடுத்து ஓட்டுனர் அந்த பேருந்தை நிறுத்தி பார்த்துள்ளார். பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததை கண்டு ஓட்டுனர் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை நகர போலீசார், கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரியும் அளவுக்கு அதன் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ஒருவரின் உயிர் போக காரணமாக இருந்த காளை மாட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நாகையில் சாலையில் நடந்து சென்ற நபரை காளைமாடு ஒன்று தனது கொம்பால் குத்தி தூக்கி வீசி அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.