கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில் இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி விற்பனை செய்யும் ஏரல் பகுதியை சேர்ந்த முத்துராஜ்-ஜோதிகா தம்பதியரின் 4 மாத குழந்தை ஹரியை கடந்த 23ம் தேதி நள்ளிரவில் பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையின் தாயார் ஜோதிகா வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்றது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சாந்தி என்ற பெண் தூக்கிச் சென்றது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வரவே, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கடத்திச் சென்ற சாந்தியை கைது செய்து, அவரிடமிருந்து ஆண் குழந்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட நான்கு மாத குழந்தையை வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து குழந்தையின் பெற்றோரிடம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் தலைமையில் போலீசார் ஒப்படைத்தனர்.
குழந்தையை மீட்க சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.