நாட்டில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டார்கள் என்றும் ஹிந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்ற மொழிகளிக்கான நிலைக்குழுவில் பேசும்போது நாட்டில் இந்தி மட்டும் தான் முதன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் 70% கோப்புகள் அனுப்பப்படுகின்றனர். அமைச்சரவை கூட்டத்தில் கூட ஹிந்தியில் கோப்புகள் கொடுக்கப்படுகின்றனர். எனவே ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி மாநிலங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், மாநிலத்திற்கு மாநிலம் மொழி மாறுகிறது.
ஹிந்தி மொழி குறித்து அமித் ஷா கூறிய கருத்து அனைத்து மாநில மொழிகளுக்கு எதிரான கருத்தாக உள்ளது என்றார். மேலும், ஹிந்தி குறித்து அமித் ஷா கூறிய கருத்து மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது என்றும் நாடடில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டார்கள் அமித் ஷா அவரது கருத்தை திரும்பபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி மக்களால் தாங்க முடியாத நிலையில் மின் கட்டனம் உயர்ந்துள்ளது என்றும் மின் கூட்டண உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் எற்படும் நிலை உள்ளது. எனவே மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். இதேபோல் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் புதுச்சேரியில் நில அபகரிப்பு நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.