கோவை: கோவை துடியலூர் புது முத்துநகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊசி பாசி பின்னியபடி வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 65 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து தருகிறோம். இங்கு மின் இணைப்பு கேட்டு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு மின் இணைப்பு தர வில்லை.
மேலும் அ.தி.மு க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகர் எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்று துடியலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மின் இணைப்பு பெற தடையின்மை சான்றிதழ் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தோம்.
ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மின்விளக்கு வசதி இல்லாததால் எங்கள் பகுதி மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே நரிக்குறவர் இன மக்களை வஞ்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.