ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேசிய விருது : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் பாராட்டு!!
‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
அந்த வகையில் கோவையில் பல திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் பல திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஏரிகளை அழகுபடுத்துதல் மற்றும் புத்துயிர் அளிப்பது மற்றும் மாதிரி சாலைகள் மேம்பாடு ஆகியவை, இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான நான்காவது பதிப்பில் ‘ கட்டப்பட்ட சூழல் ‘ பிரிவில் கோவை முதலிடம் பெற உதவியது.
இந்த நிலையில் ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் சார்பபில் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவசமாக ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஆல், அரசு, வேம்பு, மூங்கில், வாகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதை தவிர மாநகராட்சி பள்ள மாணவ மாணவிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம், இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாமும் நடைபெற்றது.
அதில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் உக்கடம், பெரியகுளம், வாலாங்குளம் புனரமைத்தல், டிபி ரோடு சீரமைத்தல் பணிக்காக தேசிய அளவில் முதலிடம் பிடித்து விருதுக்காக தேர்வானது. மேலும் தென் இந்திய அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
இதற்காக திறம்பட பணியாற்றிய கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் சிவகுமார், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் பொறியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விழாவில் பாராட்டு தெரிவித்து நற்சான்று வழங்கப்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.