தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
இதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன், சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணப் புகைப்படங்களை கூட, திரைப்படங்களின் போஸ்டர்களை வெளியிடுவது போன்று, மெல்ல மெல்ல வெளியிட்டனர்.
பின்னர், HoneyMoon சென்று விட்டு சென்னை வந்த அவர்கள், சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். நயன்தாராவின் கரம்பிடித்த ராசியோ என்னமோ, சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு விழாவை நடத்தும் ஆர்டரை விக்னேஷ் சிவன் பெற்றார்.
அவரும் அதனை கனகச்சிதமாக நடத்தி முடித்தார். இது அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேவேளையில், நயன்தாராவும் படத்தில் நடிப்பதை பிஸியாக இருநது வந்தார்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி ஏற்பாடுகளால் அதிக வேலைப்பளுவால் இருந்து வந்த விக்னேஷ் சிவன், தற்போது சற்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, தனது மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளார்.
அதுவும் தனி விமானத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.