Categories: தமிழகம்

நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூவையா மகன் ஆனந்தபாண்டி (வயது 51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துனை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அடுத்த நாள் புதன்கிழமை காலையில் பூமிநாதன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது ஆனந்தபாண்டி அறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமிநாதன் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆனந்த பாண்டியின் தலை, முதுகு உட்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் நேரில் பார்வையிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

16 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.