டிப்பர் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி தர அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மே 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்க தலைவர் சரவணன் தலைமையில் மாதவரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சங்கச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- டீசல் விலை உயர்வு, வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை.
நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவை விலை உயர்வு அதிகரித்த நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணம் 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 30 சதவீதமாக வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். லாரிகள் மூலம் ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரும்பு உருக்கு ஆலை, செங்கல் சூளை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திகிறோம். அரசு தலையிட்டு வரும் 1-ஆம் தேதிக்குள் வாடகை உயர்விற்கு உரிய தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம். இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிப்பு ஏற்படாமல், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
This website uses cookies.