டிப்பர் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி தர அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மே 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்க தலைவர் சரவணன் தலைமையில் மாதவரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சங்கச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- டீசல் விலை உயர்வு, வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை.
நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவை விலை உயர்வு அதிகரித்த நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணம் 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 30 சதவீதமாக வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். லாரிகள் மூலம் ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரும்பு உருக்கு ஆலை, செங்கல் சூளை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திகிறோம். அரசு தலையிட்டு வரும் 1-ஆம் தேதிக்குள் வாடகை உயர்விற்கு உரிய தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம். இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிப்பு ஏற்படாமல், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.