நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்களிடம் நீட் பயிற்சி விளம்பர நோட்டீஸ்.. திமுக அரசுக்கு எதிராக கருத்து!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள 4-தனியார் பள்ளிகளில் இன்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் படிப்பிற்கான நுழைவு தேர்வுகளை எழுதினர்.
தேர்வு எழுத சென்ற மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களுடைய பெற்றோர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்களின் வாசலில் நீண்ட நேரம் காத்து கிடந்தனர்.
நீட் தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தனியார் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தும் மையங்களில் இருந்து வந்த நபர்கள் சிலர் தங்கள் மையங்களில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சிகள் குறித்த விளம்பர நோட்டீஸ்களை வழங்கினர்.
நோட்டீஸ்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அதனை தங்கள் பெற்றோர்களிடம் வழங்கிய பொழுது ஆளும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூறியது போல் தமிழகத்தில் நீட் தேர்வினை என்றும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு சிறந்த உதாரணமாக நீட் தேர்வு எழுதி விட்டு வெளியே வரும் மாணவர்களிடம் தங்கள் நிறுவனங்களின் விளம்பரம் நோட்டீஸ்களை வழங்கி இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கண்ணதாசனா? எம்எஸ் விஸ்வநாதனா? மீண்டும் வைரமுத்து கிளப்பிய சர்ச்சை..!!!!
மேலும் திமுக அரசு இனிமேல் நீட் தேர்வை நிறுத்தி விடுவோம் என்று பொய் கூறாமல் தனியார் பயிற்சி வகுப்புகளை போல் அரசும் சிறந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி தமிழக பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி சென்றனர்..
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.