நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது, விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “மாற்றங்கள்” இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- முத்தமிழறிஞர் கலைஞர் மகளிருக்கென ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தினார். மகளிர் சுய உதவிக்குழு, மகப்பேரு உதவி, திருமண உதவி, மகளிர் உள்ளட்டாசி அமைப்புகளில் 33% இடஒதுக்கீடு அமல்படுத்தினார். அதேபோல் மகளிருக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தி 21 மேயர்களில் 11 பெண்களை மேயராக்கிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும்.
முத்தமிழறிஞர் கலைஞரை போல் முதலமைச்சரும் ஏராளமான திட்டங்களை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பேருந்து, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறோதோ அப்போதெல்லாம் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எதிர்காலத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது முன்னுரிமை அளிக்கப்படும். நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது. விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம், எனக் கூறினார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.