Categories: தமிழகம்

நீட் ரத்தாக போகுது, காவிரி நீர் வரப்போகுது : கொஞ்சம் பொறுமையா இருங்க… சபாநாயகர் அப்பாவு கூல்!!!

நீட் ரத்தாக போகுது, காவிரி நீர் வரப்போகுது : கொஞ்சம் பொறுமையா இருங்க… சபாநாயகர் அப்பாவு கூல்!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா நாட்டுக்காக உழைத்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவருக்கு டாக்டர் பட்டம்  கொடுக்க மதுரை பல்கலைகழகத்தில் ஆட்சி மன்றக்குழு ஒப்புதலோடு பட்டமளிக்க இருந்த நிலையில் அதை சவார்க்கர் வழிவந்தவர்கள்  மறுக்கின்றார்கள். அவருக்கு பட்டம் கொடுத்தால் கவர்னருக்கு பெருமை சேர்ந்திருக்கும். எதனால் கொடுக்கவில்லை என்பதற்கான காரணம் புரியவில்லை.

எதிர்கட்சி தலைவரது இருக்கை குறித்து எந்தவித சர்ச்சை கருத்தும் இல்லை. கடந்த சட்டசபை கூட்ட நிறைவு நாளில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது.

சட்டசபை முன்வரிசையில் கட்சி தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு தரப்பட வேண்டிய மரியாதைகள் குறித்தும் தெளிவாக தெரிவித்தாகி விட்டது. இருக்கை விவகாரத்தில் யாரும் குரல் எழுப்பக்கூடாது . அது எனது தனிப்பட்ட விருப்பம் என முந்தைய சபாநாயகர் தனபால் தெரிவித்திருக்கிறார்.

தேமுதிக பிரேமலதாவால் படிக்க முடியாது என்பதால் 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது என சொல்லியிருக்கலாம். அவங்க இனிமே படித்து டாக்டராக வர முடியாது. நீட் அவர்களுக்கானதல்ல. வருங்கால மாணவ மாணவியர்களுக்கானது. கருணாநிதி ஆட்சி காலத்தில்  பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிதாக ஒரு கல்விக்கொள்கையை அறிவித்து மீண்டும் தேர்வு வைக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதில் தமிழக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிறுகுறு நடுத்தர தொழில் நடத்துவோருக்கு பீக் அவரில் ஈபி கனைக்‌ஷன் தொகையை கூடுதலாக வசூலிக்கும் நடைமுறையை நாம் கொண்டுவரவில்லை. சென்ரல் எனர்ஜி டிபார்ட்மெண்ட் கூடுதல் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. அதனால் இதில் நம்மால்  தலையிட வழியல்லை.

இந்தியா 67 வருடத்தில் வாங்கிய கடன் 55 லட்சம் கோடி. மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டு காலத்தில் வாங்கப்பட்டுள்ள கடன் 140 லட்சம் கோடி கடன் மட்டும்  வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த அனைவரின் மீதும் கடன்சுமை ஏறியுள்ளது. குஜராத்தை சேர்ந்த 80 முதலாளிகளுக்கு ரூ. 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் நிதியாக பல ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளனர்.

இன்றைக்கு காஸ் ,பெட்ரோல் பொருட்களை கையாளும் சமூகத்தினர் 95 சதவீதம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் எனவும் சொல்கின்றனர். அவர்கள் தான் கடன் கொடுத்து கடனை ரத்து செய்கின்றனர்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கெடுக்க வேண்டும். திருவாரூர் பல்கலைகழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கு ரூ. 11 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. கர்நாடகவிலிருந்து தண்ணீரை திறந்துவிட பாஜ தவிர அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கொண்டுள்ளன. டெல்டாவில் பணப்பயிர் பயிரிட முடியுமா என கலெக்டரிடம் ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.