தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளியிலேயே ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் நீட் விலக்கு பிரச்சனை தமிழக அளவில் பிரச்சனையாக இருந்தது தற்போது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் நல்ல முடிவு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.