நெல்லை ; 10 ம் வகுப்பு மாணவனை சக மாணவனும், ஆசிரியரும் மாறி மாறி தாக்கியதால் உடல் நலம் குன்றி சிரமப்படும் தனது மகனின் பாதிப்புக்குள்ளானதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், இவரின் மகன் பாரத். பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் நடந்த கணித திருப்புதல் தேர்வின்போது தேர்வறையில் அருகில் இருந்த மாணவன் காப்பி அடிக்க தேர்வு எழுதிய பேப்பரை பாரத்திடம் கேட்டு கொடுக்காத நிலையில், அவரின் கழுத்தில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தேர்வறையில் இருந்த கண்காணிப்பாளர் காப்பி அடிப்பதை கண்டு இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படை்தத நிலையில் ஆசியரியர்களும் பாரத்தை பிரம்பால் அடித்து காயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாணவன் பாரத்திற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, தொண்டை பகுதியில் நீர் கட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இதன் பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களும் அடித்ததில் கால் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், மாணவன் பாரத்தை தாக்கிய ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவன் பாரத்தின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் தாக்கியதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் பாரத் என்ற மாணவன் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.