நெல்லை பாளையங்கோட்டை பள்ளியில் ஆசிரியர் தாக்கியதாக கூறி பிளஸ்1 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையாங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று (கிறிஸ்துராஜா) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆசிரியர் தாக்கியதாக சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
அப்போது, அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்து தோல்வி அடைந்ததால் தங்களை ஆசிரியர் கிங்ஸ்லி தாக்கியதாகவும், அதனை செல்போனில் வீடியோ எடுத்ததற்காக மீண்டும் தனி அறையில் வைத்து ஆசிரியர் தாக்குதல் நடத்தியதில் கண், தொடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வலி இருப்பதாக கூறினர்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் ஆசிரியர் கிங்ஸ்லி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாகவும், மாணவரை ஆசிரியர் தாக்கிய விவகாரம் தொடர்பாகவும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.