அம்பாசமுத்திரம் அருகே லாரி பைக் மோதல் சம்பவ இடத்திலே ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் பலி.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மகன் இசக்கிராஜுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த நிலையில், தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக அவருடைய அம்மா அல்காரி(எ)சரஸ்வதி (50), அவரது தங்கை இசக்கியம்மாள் என்ற கார்த்திகா (25), தங்கையின் மகன் சந்துரு (2) ஆகிய நான்கு பேர்களும் ஒரே பைக்கில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் கோட்டாராங்களும் விலக்கு அருகில் வரும் பொழுது எதிரே டிப்பர் லாரியை அசோக் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அதன் அச்சு முறிந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தாறுமாறாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி ஒரே பைக்கில் வந்த இரண்டு வயது குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பைக்கை ஓட்டி வந்த இசக்கி ராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துவிட்டார்.
சம்பவம் அறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.