நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற என் மக்கள் யாத்திரையின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணைந்தார் களக்காடு நகராட்சி கவுன்சிலர்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் 21ஆவது நாள் பயணம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணத்தின் போது, களக்காடு கோவில் பத்து பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் தொண்டர்களோடு இணைந்து டீ குடித்தார்.
தொடர்ந்து கடை உரிமையாளரிடம் கடையில் ஒட்டப்பட்டு இருந்த பெயர் பலகை குறித்தும், கடும் டி என்றால் என்ன என்பது குறித்தும் விளக்கமாக கேட்டறிந்தார். 40 தொகுதியிலும் 40 வகையான டீ இருப்பதாகவும், அங்கிருந்து அவர்களுடன் பேசி சிரித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நடை பயணத்தின் போது, சாலையில் நின்றிருந்த சிறுவர்கள் பார்த்து கையசைத்தவுடன் அருகில் சென்று அவர்களிடம் உரையாடினார். அப்போது, ஒரு சிறுவன் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டப்பட்டிருப்பதை கண்ட அவர், இது போன்றெல்லாம் முடி வெட்டாதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த பயணத்தின் போது களக்காடு நகராட்சியின் 17வது வார்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கரநாராயணன் என்பவர் அண்ணாமலைக்கு சால்வே அனுவித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
This website uses cookies.