திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி சமாதானபுரத்தில் இருந்து பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இரண்டு பெண்கள், இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து பேருந்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து சிலர் கண்காணித்த நிலையில், அவர்கள் வயதான மூதாட்டி இடம் இருந்து நகைகளை பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த சிலர் 3 பெண்களைப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
இரண்டு பேரை பிடித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பேரும் சேலம் மாவட்டம் மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த ஆஷா மற்றும் வாசுகி என்றும் தெரிவித்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து ஓடும் பேருந்தில் கொள்ளை முயற்சியில் பெண்கள் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.