திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் இடத்தை காலி செய்ததால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தமுள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 வார்டுகளில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால், மக்கள் நல பிரச்சனைகளில் சரி செய்வதற்கான அனுமதி தருவதற்கு மேயர் காலம் கடத்துவதாகவும், கமிஷன் கூடுதலாக கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மேயர் பேசத் துவங்கியவுடன் இடத்தை காலி செய்து வெளியே சென்றனர்.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேயர் அதே கட்சியை சார்ந்த கவுன்சிலர்கள் இடையேயான மோதல் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்தது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.