நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் மர்ம நபர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தை ரெஜி என்பவர் ஓட்டி சென்றார். கண்ணன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். கல்லிடைக்குறிச்சி பகுதியில் பேருந்து சென்ற போது, திடீரென பைக்கில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்துள்ளனர்.
தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்த மர்ம நபர், தன்னுடன் வந்த இருவரை பேருந்தில் ஏற்றி விட்டுள்ளார். பின்னர், ஓட்டுனர் ரெஜி மற்றும் நடத்துனர் இருவரும் அந்த இரண்டு நபர்களை சத்தம் போட்டதாக தெரிகிறது. பஸ் ஸ்டாப்பில் ஏறாமல் நடுரோட்டில் வண்டியை மறித்து ஏறலாமா..? என நடத்துனர் கண்ணன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் தன்னை தகாத வார்த்தையால் திட்டுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் பைக்கில் கொலைவெறியோடு பேருந்தை பின்தொடர்ந்துள்ளார்.
வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற உடன் அங்கு பைக்கில் வந்த நபர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொண்டு ஓட்டுனர் இருக்கைக்கு ஆக்ரோஷமுடன் சென்றுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஓட்டுனர் ரெஜியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரெஜியின் இடது கண்ணத்தில் தொடங்கி மூக்கு வரை பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத ரெஜி நிலைகுலைந்துள்ளார். தடுக்க சென்ற நடத்துனர் கண்ணனுக்கும் லேசான வெட்டு விழுந்துள்ளது.
பின்னர் பேருந்தில் ஏறியிருந்த இரண்டு நபர்களை மீண்டும் பைக்கில் ஏற்றி கொண்டு ஓட்டுனரை வெட்டிய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். வீரவநல்லூர் போலீசார் ஓட்டுனர்- நடத்துனர் இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுனர் ரெஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.