நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் பயணிகள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வள்ளியூர் பணிமனைக்கு சொந்தமான இந்த அரசு பேருந்தில் இன்று பின்பக்கம் படிக்கட்டு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் ஏறி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
மேலும், வயதான பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்பக்க வாசல் வழியே ஏறி இறங்க வேண்டிய சூழல் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு பேருந்து உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லை மண்டலப் போக்குவரத்தில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது படிக்கட்டு இல்லாத மோசமான நிலையில் இருக்கும் பேருந்தை ஆபத்தான நிலையில் இயக்குவது போக்குவரத்து துறையில் அவல நிலையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
படிக்கட்டு இல்லா பேருந்து குறித்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆகவே நெல்லை மண்டல போக்குவரத்து துறையில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதை தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தரமான பேருந்துகளை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.