நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜஜெகன் என்பவருக்குஅரிவாள் வெட்டு விட்டு தப்பிய வாலிபர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகன் (48). இவருக்கு வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல், தனது அலுவலகத்தை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த இரண்டு வாலிபர்கள் கத்தியால் ஜோசப் ராஜ ஜெகனின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் தூரத்தி சென்று பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிப்பட்ட வாலிபர்கள் திருநெல்வேலி அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த், கார்த்திக் என்பது தெரிய வந்தது. எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.