நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜஜெகன் என்பவருக்குஅரிவாள் வெட்டு விட்டு தப்பிய வாலிபர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகன் (48). இவருக்கு வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல், தனது அலுவலகத்தை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த இரண்டு வாலிபர்கள் கத்தியால் ஜோசப் ராஜ ஜெகனின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் தூரத்தி சென்று பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிப்பட்ட வாலிபர்கள் திருநெல்வேலி அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த், கார்த்திக் என்பது தெரிய வந்தது. எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.