நெல்லை ; நெல்லையில் பிரபல ரவடியை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சார்ந்தவர் தீபக் ராஜா (35). இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாதிய மோதல் தொடர்புடைய பல்வேறு கொலை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள்வெட்டு… தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் ; இருவர் கைது…!!
இந்த நிலையில், இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்தார். இதற்காக அந்தப் பெண்ணின் நண்பர்களுக்கு திருமண விருந்து அளிப்பதற்காக கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
அனைவரும் உணவருந்தி விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் உணவக வாசலிலேயே அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் படுகாயமடைந்த தீபக் ராஜா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் மற்றும் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.