Categories: தமிழகம்

மகளின் தவறான தொடர்பை பற்றி கூறிய அக்கா மகனை அடித்தே கொன்ற தாய்மாமன் : தலைமறைவான அத்தையை தேடும் போலீஸ்!!

வேலூர் : பாலிடெக்னிக் மாணவணை உண்மையை சொல்லியதற்காக தாய்மாமன் குடும்பத்தார் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஜெய்சங்கர் நாயுடு மகன் தருண் குமார் (வயது 20). இவர் காட்பாடி அடுத்த சின்ன லத்தேரியில் உள்ள அவரது தாய் மாமா ரமேஷ் (வயது 45 ) என்பவர் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ரமேஷின் மகள் வேறு யாருடனோ போனில் பேசுவதாக தருண்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தருண்குமாரை தாக்கினார். இதுபற்றி அவர் பெங்களூரில் உள்ள அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

தருண்குமாரின் தாயார் கிரிஜா லத்தேரிக்கு வந்து மகனை தாக்கியது குறித்து அவரது சகோதரர் ரமேஷிடம் தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ரமேஷின் மனைவி சதிஷ்வரி (வயது 38) மகன் நவின் (வயது 16) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தருண்குமாரையும் அம்மா கிரிஜா, ஆகியோரை தென்னை மட்டையால் சராமாரியாக தாக்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் தடுத்தும் தாக்கிக் கொண்டே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

இதில் படுகாயமடைந்த தருண் குமாரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி தருண் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் ரமேஷின் மனைவி சதீஷ்வரி மகன் நவீன் இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தருண் குமாரின் தாயார் கிரிஜா ரமேஷின் மனைவி சதீஷ்வரி நவீன் ஆகிய இருவரும் கைது செய்யாமல் உடலை எடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இறந்த மாணவன் அருண்குமார் உடன் பயின்ற பெங்களூரு மாணவர்கள் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நண்பரின் உடலைப் பார்த்து கண்ணீர் விடும் காட்சி அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

5 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

7 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

7 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

9 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

9 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

10 hours ago

This website uses cookies.