மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதனை எதிர்த்து மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று மேலூரில் மதிமுக தலைவர் வைகோ, இந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து கண்டன கூட்டத்தில் பேசினார்.
இதில் பேசிய வைகோ அணில் அகர்வால் கூட்டத்தினை மதுரை மண்டலத்திற்கு நுழைய விட மாட்டோம் எனவும் தமிழக மண்ணை பாதுகாக்கும் சூழலில் எங்கள் அணியினர் முழுமையாக நின்று எதிர்த்து பாதுகாப்போம் எனவும் பேசினார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போராடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இதேபோன்று, 3000 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க அரிட்டாபட்டி உள்ளிட்ட தொன்மையான கிராமங்கள் மற்றும் இந்த பகுதி விவசாயிகளை பாதுகாக்கவும், தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராட இருப்பதாகவும் பேசினார். இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
This website uses cookies.