தமிழகம்

சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த புதிய வழக்கு!

தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழ்நாடு காவல்துறை மற்ரும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனால், இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி வந்தார். ஆனால், கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்: இது மீண்டும் பரபரப்புக்கு உள்ளானது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில் இருந்தவாறே கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்படி, தூய்மைப் பணியாளர், தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டுப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!

முன்னதாக, சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே, இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது நடைபெற்ற விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.