புதிய மின் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா..? என்பது குறித்து தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் சங்க செயலாளர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.
புதிய மின் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வட்டார செயலாளர் சரவணன் கூறியதாவது :- புதிய மின்சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரியத்திலும் புதிய மின் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசு இந்த மசோதாவை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கு கிடைத்து வந்த இலவச மின்சாரம் பாதிக்கப்படும். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்யும் போது, விவசாயிகள், பொதுமக்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை எதிர்த்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகத்திலும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.