கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவி கிருபா (25) உடன் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதிக்கு சுற்றுலா சென்ற போது, சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் தங்கியுள்ளார்.
விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ்குமார் – கிருமா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர். அப்போது புதுமணப்பெண் கிருபாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தங்கள் வசம் வைத்திருந்த மருந்துகளை உட்கொண்டுள்ளார். எனினும் மூச்சுதிணறல் சரியாகாமல் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதையடுத்து, குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபா அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா..? அல்லது வேறு ஏதாவது காரணமா..? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்மநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா வந்த இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.