சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
விமான நிலையத்தில் நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை நிறுத்த ரூ. 230 கோடி மதிப்பீட்டில் ஆறு அடுக்குகள் கொண்ட அதிநவீன வாகன நிறுத்தம் கட்டப்பட்டது.
இந்த வாகனம் நிறுத்துமிடம் கடந்த ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைமுறைக்கு வந்தது.
சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், டோக்கன் பெற வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த வாகன ஓட்டிகள் கட்டண சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
அப்போது தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரில் துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மாற்று பாதையை ஏற்படுத்தி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் காரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.