சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
விமான நிலையத்தில் நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை நிறுத்த ரூ. 230 கோடி மதிப்பீட்டில் ஆறு அடுக்குகள் கொண்ட அதிநவீன வாகன நிறுத்தம் கட்டப்பட்டது.
இந்த வாகனம் நிறுத்துமிடம் கடந்த ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைமுறைக்கு வந்தது.
சென்னை விமான நிலையத்தில் ஆறடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், டோக்கன் பெற வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த வாகன ஓட்டிகள் கட்டண சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
அப்போது தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரில் துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மாற்று பாதையை ஏற்படுத்தி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் காரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.