கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சுதர்சனுக்கும், மற்றொரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணம் ஆன இரண்டு வாரங்களில் புதுப்பெண் தூக்கு மாட்டி இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட ராகபிரியாவின் கணவர் சுதர்சன் தாந்தோணிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.