கோவை : பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞரை மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் (தினத்தந்தி) புகைப்பட கலைஞர் விவேக் கோவை புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தனது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக, புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து பார்க்கிங்கை தயார் செய்துள்ளார்.
அந்த இடத்தில் அவருடைய வீட்டு அருகே இருந்த ஒரு நபர் காரை கொண்டு நிறுத்திவிட்டாராம். அதனால், இரவு ஏழு மணிக்கு வந்த விவேக் அவரிடம் தங்களது காரை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். அவர் நான் எடுத்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இவரும் அதைப்பற்றி கேட்கவில்லை.
இரவு 12 மணி அளவில் மது போதையில் வந்த அந்த நபர் விவேக்கின் வீட்டை தட்டி, “நாங்கள் அப்படித்தான் எங்களது காரை நிறுத்துவோம். உனக்கு என்ன வந்தது,” என்று கூறி விவேக் பலமாக கட்டையாலும், கல்லாலும் தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக கேட்டதற்கு, ‘நாங்கள் எல்லாம் திமுக கட்சியை சார்ந்தவர்கள். எங்களை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. வழக்கு பதிவு செய்தாலும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,’ என்று சொல்லி உள்ளனர்.
இதனிடையே, அவர்கள் தாக்கியதில் மயங்கிய விவேக்கை, பக்கத்து வீட்டார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து தற்பொழுது கங்கா மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
கார் நிறுத்தும் விவகாரத்தில் செய்தியாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
This website uses cookies.