ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கணக்காளரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45). ஆதவா அறக்கட்டளை நிறுவனரான இவர், நேற்று ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.
இதனை தடுக்க முயன்ற அவரது கணக்காளர் ராஜமணியாபுரத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் ராஜமாணிக்கம் (25) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த பாலகுமரேசன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கணக்காளர் ராஜமாணிக்கம் காயல்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆறுமுகநேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்டவிரோத கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலகுமரேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக அவர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜமணியாபுரத்தைச் சேர்ந்த சூசைராஜ் மகன்கள் பிரதீப், பிரவீன், திலகர் மகன் அலெக்ஸ் ரூபன், பாப்பையா மகன் அருண் உட்பட 7பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.